சிங்கபூரில் வரும் மே 1-05-2009 அன்று ஈழத்தமிழருக்க்காக கொடுங்கோன்மையில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு
தமிழ்வேள் நற்பணி மன்றம் முன்னிலையில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம், எழுத்தேணி அறக்கட்டளை,ஒன்றுபடு தமிழா இணையக் குழுமம் இணைந்து வருகிற மே ஒன்றாம் நாள் (01 – 05 – 2009) சையது ஆல்வி சாலையில் உள்ள (முஸ்தாபா எதிரில்) ஆனந்த பவன் உணவகத்தில் ஒரு நினைவேந்தலை மேற்கொள்கிறோம்.
தமிழை உயிர் மூச்சாய்க் கொண்டு தணியாத விடுதலைத் தாகத்தில் ஈழ விடுதலையின் வித்தாய்ப் போன எம் உறவுகளின் நினைவை ஏந்தி, தமிழை உயிராய் நேசிக்க ஒரு உறுதியேற்பு நிகழ்வாகச் சிங்கை வாழும் தமிழ் நெஞ்சங்கள் அவர்களின் நினைவை ஏந்துகிறோம். கரம் இணைந்து கண்ணீர் மலர் செலுத்தக் கடல் போல் தமிழரே திரள்வீர்.
நாள் : மே திங்கள் 1 ஆம் நாள்
நேரம் : காலை 10.30 மணி
இடம் : ஆனந்த பவன் உணவகம் (முதல் தளத்தில்) – சையது ஆல்வி சாலை – சிங்கப்பூர்
தலைமை: திரு தமிழ்மறையான்
நிகழ்வுகள்: இரங்கற்பா மற்றும் இரங்கல் உரை
மண்ணுக்குள் புதைந்தாலும் மட்கிப் போகாத நம் விடுதலைப் போராளிகளின் நினைவேந்தல் மாறாத தமிழ்ப் பண்பை எம் அடுத்த தலைமுறைக்கும் அடை காத்துக் கொடுப்போம்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உணர்வுக்குத் தோள்.
நிகழ்ச்சி ஒருங்கினைப்பு:உலகத் தமிழ் மக்கள் அரங்கம்
மேலும் விபரங்களுக்கு:
சத்யா-83984444,
வேல்முருகன் -97794440
-
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5329947315057064876&kw=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D