இலங்கையில் நடைபெறும் இன படுகொலையை கண்டித்தும், இந்திய அரசு ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து செய்து வரும் துரோக செயலை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும், உலக தமிழ் மக்கள் அரங்கம் சார்பாக இன்று (22-02-09), ஈழ சுடர் - மாவீரன் முத்து குமார் அவர்கள் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் தாலுக்கா , கீழமுடிமண் கிராம மக்களும் இணைந்து ஒரு நாள் உண்ணாநிலை அறப்போராட்டைதை அங்கு நடத்தினர்.
எழுச்சியோடு நடை பெற்ற இந்த போராட்டத்தில் மக்கள் அதரவு மிகுதியாக இருந்தது. எராளமான பெண்களும் குழந்தைகளும் குடும்பத்தோடு கலந்து கொண்டது மேலும் நம்மை ஊக்கபடுத்தி நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை இது என்பதை உணர்த்தியது …
இந்த போராட்டத்தின் வெற்றியை தொர்ந்து பல்வேறு போராட்டங்களும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளையும் நடத்த போவதாக உலக தமிழ் மக்கள் அரங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே உலக தமிழ் மக்கள் அரங்கத்தின் இளையோர் சார்பாக பெங்களுரிலே கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..
-
-
-









***

Just passing by.Btw, your website have great content!
_________________________________
Making Money $150 An Hour
எழுதியவர் Mike நாள் மார்ச் 1, 2009
நேரம் 11:34 மு.பகல்