utma எழுதியவை | பெப்ரவரி 22, 2009

அரங்கம் சார்பில் ஈழத் தமிழர்களுக்காக தூத்துக்குடியில் உண்ணாநிலை போராட்டம்

இலங்கையில் நடைபெறும் இன படுகொலையை கண்டித்தும், இந்திய அரசு ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து செய்து வரும் துரோக செயலை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும், உலக தமிழ் மக்கள் அரங்கம் சார்பாக இன்று (22-02-09), ஈழ சுடர் -  மாவீரன் முத்து குமார் அவர்கள் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் தாலுக்கா , கீழமுடிமண் கிராம மக்களும் இணைந்து ஒரு நாள் உண்ணாநிலை அறப்போராட்டைதை அங்கு நடத்தினர்.

எழுச்சியோடு நடை பெற்ற இந்த போராட்டத்தில் மக்கள் அதரவு மிகுதியாக இருந்தது. எராளமான பெண்களும் குழந்தைகளும் குடும்பத்தோடு கலந்து கொண்டது மேலும் நம்மை ஊக்கபடுத்தி நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை இது என்பதை உணர்த்தியது …

இந்த போராட்டத்தின் வெற்றியை தொர்ந்து பல்வேறு போராட்டங்களும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளையும் நடத்த போவதாக உலக தமிழ் மக்கள் அரங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே உலக தமிழ் மக்கள் அரங்கத்தின் இளையோர் சார்பாக பெங்களுரிலே கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..

img_0001-

img_0002-

img_0003-

img_0004-

img_0005

img_0006

img_0007

img_0008

img_0009

img_0010

img_0011

img_0012

img_0013

***


மறுவினைகள்

  1. Just passing by.Btw, your website have great content!

    _________________________________
    Making Money $150 An Hour


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்